வாய்க்காலில் விழும் குப்பைகள்

Update: 2023-08-23 12:01 GMT

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் ஊராட்சி பகுதியில் உள்ள பெருமாள் கோவில், மாரியம்மன் கோவில் அருகே இப்பகுதியில் ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், இந்த குப்பைகள் காற்றில் பறந்து அருகில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் விழுவதால் கழிவுநீர் செல்ல வழியின்றி அடைப்பு ஏற்பட்டு தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்