மதுப்பிரியர்களால் அதிகரிக்கும் குப்பை

Update: 2023-08-13 11:41 GMT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள தொண்டப்பாடி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் பாலையூரில் உள்ளது. இந்த அலுவலகத்தின் அருகே இரவு நேரத்தில் பலர் மது அருந்திவிட்டு அந்தப் பகுதியிலேயே பிளாஸ்டிக் கழிவுகளை போட்டுவிட்டு செல்கின்றனர். தற்போது குப்பைகள் அதிகரித்து அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் முகம் சுழித்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்