ஆற்றங்கரையோரத்தில் குப்பைகள்

Update: 2023-08-09 10:41 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதி-திட்டை சாலையில் உள்ள கழுமலைஆற்றோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் பன்றிகள் அதிகளவில் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. குப்பைகளில் மழைநீர் தேங்கி சாக்கடை போல மாறிகிடக்கிறது. இதன்காரணமாக அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மூக்கை மூடியபடி அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆற்றங்கரையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்