சுகாதார சீர்கேடு

Update: 2023-07-19 11:16 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த புங்கம்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமார்  50 -க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். அதன் அருகில் அங்கன்வாடி மையத்தில் 20  குழந்தைகளுக்கு மேல் இருக்கின்றன. இதன் அருகில் குப்பை கொட்டும் இடம் உள்ளது. இதை தினமும் பராமரிக்கப்படுவதும் இல்லை. சிலர் குப்பையில் தீ வைப்பதால் இதிலிருந்து வரும் புகை குழந்தைகளுக்கு மூச்சுதிணறல் ஏற்படுகிறது. இதுபற்றி சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு பலமுறை தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. எனவே அந்த குப்பை தொட்டியை வேறு இடத்திற்கு மாற்றி சுகாதார சீர்கேடு ஏற்படாதவாறு பாதுகாக்க வேண்டும்.

மேலும் செய்திகள்