குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-07-16 11:22 GMT

கரூர் மாவட்டம், குந்தாணி பாளையம் நத்தமேடு பகுதியில் செயல்பட்டு வரும் கடைகளில் பயன்படுத்தி வீணாகும் பிளாஸ்டிக் கழிவுகள் , குப்பைகள் ஆகியவற்றை பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் போடாமல் சாலையோரத்தில் குவித்து வைத்துள்ளனர். தற்போது இப்பகுதியில் மழை பெய்து வருவதால் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகளில் இருந்து கடும் துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்