குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2023-07-09 14:29 GMT

தஞ்சை அடுத்த நாஞ்சிக்கோட்டை ஊராட்சி பகுதி இ.பி காலனி அருகே மாதா நகர் உள்ளது. இங்குள்ள குடியிருப்புகளின் அருகே உள்ள காலியிடங்களில் குப்பைகள் அதிகளவில் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் குடியிருப்புவாசிகள் மூக்கை மூடியபடி சென்று வருகின்றனர். மேலும்,குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்