குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2023-07-02 16:55 GMT
உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சாலையோரத்தில் இறைச்சி மற்றும் குப்பை கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குப்பைகளை எரிப்பதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு கண் எாிச்சல், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே அப்பகுதியில் குப்பை மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்