சுவாச ேகாளாறு

Update: 2023-06-25 09:08 GMT

பொள்ளாச்சி தில்லை நகரில் சாலையோரத்தில் குப்பைகள் அதிகளவில் கொட்டப்படுகின்றன. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் அந்த குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சுவாச ேகாளாறு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதனால் அவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயமும் நிலவுகிறது. எனவே அங்கு குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும், தீ வைத்து எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும். 

மேலும் செய்திகள்