புகைமூட்டத்தால் பொதுமக்கள் அவதி

Update: 2023-06-11 14:37 GMT

பெருந்துறை - சென்னிமலை ரோடு பகுதியில் சி.எஸ்.ஐ.தேவாலயமும், அதையொட்டி தனியார் பள்ளிக்கூடமும் உள்ளன. இவைகளுக்கு அருகே ரோட்டோரம் மலைபோல் குப்பை குவிந்து கிடக்கிறது. இதனை அகற்றாமல் தீ வைத்து எரிப்பதால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக அருகே உள்ள கிறிஸ்தவ தேவாலயம் பகுதியில் வசிக்கும் மக்கள், பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வருகின்றனர். புகையை சுவாசிப்பதால் பொதுமக்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. குப்பையை தீ வைத்து எரிக்காமல் அதனை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்