ஏரிக்கரையில் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2023-05-24 12:40 GMT

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் சந்தைப்பேட்டை ஏரிக்கரையில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் மழை பெய்யும்போது இந்த குப்பைகள் ஏரிகளில் அடித்துச் சென்று தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்