பன்றிகள் தொல்லை

Update: 2023-05-14 11:02 GMT

மயிலாடுதுறை பெரிய கண்ணாரத்தெருவில் உள்ள குளக்கரை பகுதியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. பன்றிகளும் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் அங்கும்,இங்கும் ஓடுவதால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. இதன்காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பன்றிகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்


மேலும் செய்திகள்