நோய் பரவும் அபாயம்

Update: 2023-04-30 18:04 GMT

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா கருப்பூர் பேரூராட்சி தட்டாஞ்சாவடி பள்ளம் பால் சொசைட்டி அருகில் உள்ள தெருவின் ஒரு பகுதி முற்றிலும் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் மழை காலங்களில் அந்த பகுதியில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பல்வேறு நோய்களால் அவதியடைகின்றனர். எனவே அதிகாரிகள் அங்கு மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்தோஷ், ஓமலூர், சேலம்.

மேலும் செய்திகள்