சுகாதார சீர்கேடு

Update: 2023-04-30 09:36 GMT

கோவை அருகே போத்தனூர்-செட்டிப்பாளையம் சாலையில் காய்கறி கழிவுகள், கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இது தவிர அந்த பகுதியை சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. அவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. மேலும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே அங்கு கழிவுகள் கொட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். 

மேலும் செய்திகள்