சுகாதார சீர்கேடு

Update: 2023-04-19 09:50 GMT

கோவை ஆர்.எஸ்.புரம் ராமச்சந்திரா சாலையில் சண்முகம் சாலை கார்னர் பகுதியில் மாநகராட்சி அலுவலகம் எதிரே குப்பைகள் அதிகளவில் கொட்டப்பட்டு உள்ளது. இதனால் அங்கு சுகாதார சீர்ேகடு ஏற்பட்டு உள்ளதோடு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை பொத்தியபடிசெல்லும் நிலை உள்ளது. எனவே குப்பைகளை அகற்றவும், அங்கு குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும் அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்