சாலையோரம் கொட்டப்படும் மருத்துவ கழிவு

Update: 2023-04-12 14:26 GMT

கரூர் மாவட்டம், கரூர் -ஈரோடு செல்லும் நெடுஞ்சாலையில் புன்னம் ஊராட்சி பகுதியில் தனியார் கல்லூரிக்கு செல்லும் பிரிவு சாலை அருகே தார் சாலை ஓரத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மருத்துவமனைகளில் இருந்து பல்வேறு மருத்துவ கழிவுகளையும், கடைக்காரர்கள் தங்கள் கடைகளில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகளையும் மூட்டை மூட்டையாக கொண்டு வந்து போட்டு செல்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையில் அந்த கழிவுகளில் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்