பிளாஸ்டிக் குப்பைகள்

Update: 2023-04-12 09:56 GMT

ஆனைமலையை அடுத்த அய்யாமடை பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு சேகரமாகும் பிளாஸ்டிக் குப்பைகள் சாலையோரத்தில் குவித்து வைக்கப்பட்டு உள்ளது. இவை காற்று வீசும்போது, பறந்து சென்று, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மீது விழுகிறது. இதனால் அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பிளாஸ்டிக் குப்பைகளை அங்கு குவித்து வைப்பதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்