விளையாட்டு மைதானத்தில் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2023-04-09 16:15 GMT
கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்திற்கு நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்வதற்காகவும், பல்வேறு விளையாட்டு பயிற்சி மேற்கொள்வதற்காகவும் தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் வந்து செல்கிறார்கள். கிரிக்கெட் மற்றும் கால்பந்து பயிற்சியில் ஈடுபடும் பகுதியில் உள்ள சுற்றுச்சுவரையொட்டி சிலர் வெளியே இருந்து குப்பைகளை கொண்டு வந்து போடுகிறார்கள். இதில் மாட்டு சாணங்களும், பிளாஸ்டிக் பொருட்களும் அடங்கும். இதை கண்காணித்து விளையாட்டு மைதானத்தில் குப்பைகளை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்