சாலையோரத்தில் குப்பைகளை எரிப்பதால் அவதி

Update: 2023-04-05 17:47 GMT
அண்ணா கிராம ஒன்றியம், கோட்லாம்பாக்கம் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் புதுப்பேட்டை சாலையோரம் எரியூட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் வருகிறது. மேலும் குப்பைகள் தரம் பிரிக்காமல் எரிக்கப்படுவதால், தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சாலையோரத்தில் குப்பைகள் எரிக்கப்படுவதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்