துர்நாற்றம் வீசுவதால் மாணவர்கள் அவதி

Update: 2023-04-05 13:45 GMT
அரியலூர் மாவட்டம், செங்குந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன்பு அப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதினால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் இவற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதினால் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்