குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-04-05 08:04 GMT

கோவை சிறுவாணி மெயின்ரோடு இருட்டுப்பள்ளம் பகுதியை அடுத்த செரும்புபள்ளம் பாலத்தின் இருபுறமும் நெடுஞ்சாலைத்துறை சார்பில், இங்கு குப்பைகள் கொட்டக்கூடாது என்று பதாகை வைத்துள்ளனர். ஆனால் அதையும் மீறி இரவு நேரங்களில் மூட்டை மூட்டையாக கொண்டு வந்து குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதன் காரணமாக அங்கு குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் கடும் துர்நாற்றமும் வீசுகிறது. எனவே அங்கு குப்பைகள் கொட்டாமல் தடுக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்