விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் இடையன்குளம் பஞ்சாயத்துக்குட்பட்ட அருந்ததியர் தெருவில் குடிநீர் குழாய் அருகே குப்பை தொட்டி உள்ளது. குப்பைகள், கழிவுநீர் சூழ்ந்து மக்கள் குடிதண்ணீர் பிடிக்கும் இடத்தில் மிகவும் மோசமான நிலையில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பை தொட்டியை வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.