சுகாதார சீர்கேடு

Update: 2023-04-02 09:24 GMT

கோவை உக்கடம் புல்லுக்காடு பள்ளிவாசல் அருகே இருந்து ஜி.எம். நகர், காந்தி நகர் செல்லும் சாலையில் இருபுறமும் வாகனங்களில் கொண்டு வந்து குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதன் காரணமாக அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இது தவிர தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே அங்கு குப்பைகள் கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்