தீ வைத்து எரிக்கப்படும் குப்பைகள்

Update: 2023-03-29 17:11 GMT

உத்தமபாளையம் பேரூராட்சி 3-வது வார்டு பகுதியில் உள்ள கழிப்பறை முறையான பராமரிப்பு இல்லாததால் துர்நாற்றம் வீசுகிறது. அதோடு கழிப்பறை அருகில் குப்பைகளை கொட்டி சிலர் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சியளிப்பதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே கழிப்பறையை சுத்தப்படுத்துவதுடன், குப்பைகளை கொட்டி எரிப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்