கடலூர் போடிச்செட்டி தெருவில் குப்பைகள் அதிக அளவில் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுவதால், மாநகர மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் குப்பை தொட்டியும் கவிழ்ந்து கிடக்கிறது. எனவே குப்பைகளை அவ்வப்போது அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பார்களா?.