கழிப்பறை அருகே குவியும் குப்பை

Update: 2023-03-12 16:03 GMT

உத்தமபாளையம் பேரூராட்சி 3-வது வார்டில் உள்ள பொதுக்கழிப்பறையில் இருந்து வெளியேறும் கழிவுகள் அருகில் உள்ள கால்வாயில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கழிப்பறை அருகிலேயே பிளாஸ்டிக் குப்பைகள், வீடுகளில் சேகரமாகும் குப்பைகள் ஆகியவற்றை கொட்டிச்செல்கின்றனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வாருவதுடன் குப்பைகளையும் அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்