குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2023-03-05 16:25 GMT

சேலம் 1-வது வார்டு ஜாகீர் ரெட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் பின்புறம் கடந்த ஒரு மாதமாக குப்பை அள்ளப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. சிலநேரங்களில் குப்பைகள் திடீரென தீ பிடித்து எரிகிறது. எனவே இந்த குப்பைகளை முறையாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மதியழகன், ஜாகீர் ரெட்டிப்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்