தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2023-03-05 11:15 GMT

தஞ்சை, நாஞ்சிக்கோட்டை சாலை, பழநியப்பா நகர் பகுதியில் ஆங்காங்கே குப்பைகள், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக அந்த பகுதியில் பன்றிகள், கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிகிறது. மேலும், குவிந்து கிடக்கும் குப்பைகள் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து செல்லவும், குப்பைகளை அகற்றவும் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்