குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2022-07-20 13:19 GMT

அன்னூர் தாலுகா கீரணத்தம் பகுதியில் தொழில்நுட்ப பூங்கா அருகே உள்ள சரவணம்பட்டி செல்லும் சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் உள்ளதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பொத்திக்கொண்டு செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. எனவே குப்பைகளை உடனுக்குடன் அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்