குப்பைகளை எரிப்பதால் அவதி

Update: 2023-02-12 18:22 GMT
கடலூர் செம்மண்டலத்தில் இருந்து கடலூர் பஸ் நிலையம் செல்லும் சாலை ஓரங்களில் பிளாஸ்டிக் குப்பைகள் எரிக்கப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. மேலும் புகைமூட்டம் ஏற்படுவதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே குப்பைகளை எரிப்பதை தவிர்க்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்