கடலூர் திருப்பாதிரிப்புலியூர் நத்தவெளிசாலையோரத்தில் குப்பைகள் தீ வைத்து அடிக்கடி எரிக்கப்படுகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு வருவதால் அவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.