வீணாகும் குப்பை தொட்டிகள்

Update: 2023-02-08 08:18 GMT

கோவை மத்வராயபுரம் சிறுவாணி மெயின்ரோடு முண்டன்துறை ஆற்று பாலத்தின் கீழ் பகுதியில் குப்பை தொட்டிகள் வீணாக போட்டு வைக்கப்பட்டு உள்ளன. அவற்றை புதர் செடிகள் ஆக்கிரமித்துவிட்டன. இதனால் அந்த குப்பை தொட்டிகள் வீணாவதுடன், அரசு பணம் நஷ்டமாகிறது. மேலும் விஷ ஜந்துகளின் கூடாரமாக அந்த பகுதி மாறி வருகிறது. எனவே பாழ்பட்டு போகும் முன், அந்த குப்பை தொட்டிகளை எடுத்து, பயன்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்