சுகாதார சீர்கேடு

Update: 2023-02-08 08:17 GMT

கோவை பீளமேடு காந்திமாநகர் மைதானம் அருகே 2 குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. ஆனால் தொட்டிகளில் குப்பையை போடாமல், கீழே போட்டுவிட்டு செல்கின்றனர். காற்றில் குப்பைகள் பறப்பதோடு தெருநாய்களும் இழுத்து சாலையில் போட்டுவிட்டு செல்கின்றன. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் சிரமம் அடைகின்றனர். எனவே தொட்டிகளில் குப்பைகளை போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்