கூடுதல் குப்பை தொட்டி வேண்டும்

Update: 2023-02-05 09:54 GMT

கோவை பாலசுந்தரம் சாலையில் பி.ஆர்.எஸ். வளாகம் அருகே 2 குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. அந்த தொட்டிகளில் அடிக்கடி குப்பைகள் நிரம்பி வழிகின்றன. குப்பைகளை அகற்ற கால தாமதம் ஏற்படும்போது, சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை மூடிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே அங்கு கூடுதல் குப்பை தொட்டி வைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்