சுகாதார சீர்கேடு

Update: 2023-01-22 09:27 GMT

பொள்ளாச்சி பாலக்காடு நெடுஞ்சாலையோரத்தில் நரசிங்காபுரதில் அதிகளவில் குப்பைகள் கொட்டப்படுகிறது. அவை முறையாக அகற்றப்படுவதும் இல்லை. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் அங்கு வரும் தெருநாய்கள் குப்பைகளை சாலையில் இழுத்து போடுகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே குப்பைகளை உடனடியாக அகற்றுவதோடு மீண்டும் கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்