குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2023-01-18 16:46 GMT

சேலம் இரும்பாலை கணபதிபாளையம் முதல் கேட்டு பகுதியில் பயணிகள் நிழற்கூடம் உள்ளது. இந்த நிழற்கூடம் அருகில் குப்பைகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த பகுதியில் பயணிகள் நிற்க முடியாமல் அவதியடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த குப்பைகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-அருண்குமார் இரும்பாலை, சேலம்.

மேலும் செய்திகள்