குடியிருப்பு பகுதியில் எரிக்கப்படும் குப்பை கழிவுகள்

Update: 2023-01-11 15:02 GMT
பெங்களூரு ஜே.பி.நகர் 1-வது மெயின் 7-வது பேசில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்பின் அருகே உள்ள காலி நிலத்தில் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இதனால் வெளியேறும் நச்சு புகையை சுவாசிப்பதால் குடியிருப்புவாசிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. சிலர் மூச்சுவிட முடியாமல் அவதிப்படுகின்றனர். இதனால் குடியிருப்பு பகுதியில் குப்பை கழிவுகள் எரிக்கப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்