சுகாதார சீர்கேடு

Update: 2023-01-08 08:46 GMT

கன்னியாகுமரி முருகன்குன்றத்தில் இருந்து சுனாமி காலனி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி சாலையோரத்தில் கிடக்கும் குப்பை அகற்றுவதுடன், அவற்றை கொட்டுபவர்கள் மீதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-உதயகுமார், சுனாமிகாலனி, கன்னியாகுமரி.

மேலும் செய்திகள்