சுகாதார சீர்கேடு

Update: 2023-01-01 14:47 GMT
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே குறுக்குச் சாலையில் மளிகை கடைகள், பேக்கரிகள், காய்கறிகடைகள், பலகார கடைகள், கோழிக் கறி விற்பனை செய்யும் கடைகள், டீக்கடைகள், ஓட்டல்கள் என பல்வேறு வகையான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளையும், பிளாஸ்டிக் கப்புகளையும், கோழிக் கழிவுகளையும் கடைக்காரர்கள் கொண்டு வந்து நொய்யல் ஆற்றுப்பாலம் அருகே கொட்டி வருகின்றனர். இதனால் தொடர்ந்து துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்