குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2022-12-28 09:52 GMT

வடவள்ளி தொண்டாமுத்தூர் சாலையோரத்தில் பாலாஜி நகர் அருகே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதோடு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அந்த குப்பைகளில் உள்ள கழிவுகளை கால்நடைகள் தின்று வருகின்றன. இதனால் அவற்றின் உடல் நிலை பாதிக்கப்படும் அபாயம் நிலவுகிறது. அங்கு தொட்டி வைத்தும், அதில் குப்பையை போடாமல் வெளியே கொட்டிவிட்டு செல்கின்றனர். எனவே இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்