குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2022-11-20 13:41 GMT

குவிந்து கிடக்கும் குப்பை

திருப்பூர் தாராபுரம் கே.செட்டிபாளையம் ஜோதிநகரில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தெருநாய்கள் குப்பைகள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கொண்டு போய் போட்டுவிடுகிறது. அருகில் உள்ள பனியன் நிறுவனத்தினரும் இரவில் குப்பைகளை கொண்டு வந்துகொட்டி விட்டு சென்றுவிடுகின்றனர். இதனால் குப்பைகள் அதிகமாக குவிந்து கிடக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 3 நாட்களுக்கு ஒரு முறையாவது குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

செந்தில்,திருப்பூர்.

மேலும் செய்திகள்