சுகாதார சீர்கேடு

Update: 2022-11-20 13:40 GMT

சுகாதார சீர்கேடு

திருப்பூர் ெதன்னம்பாளையம் மார்க்கெட்டில் இருந்து அம்பேத்கர் நகர் செல்லும் வழியில் உள்ள ஜம்மனை ஓடையில் மார்க்கெட் காய்கறி கழிவுகள் மற்றும் சுற்றுவட்டார வீடுகளில் சேகரமாகும் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இந்த ஓடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே மார்க்கெட் வியாபாரிகள், பொதுமக்கள் ஓடையில் குப்பைகளை கொட்டுவதை தவிர்க்க வேண்டும். அதுபோல் மாநகராட்சி அதிகாரிகள் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும். இந்த ஓடையில் அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலத்தில் பக்க தடுப்புச்சுவர் இல்லை. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் மக்களின் பயணம் ஆபத்தில் முடியும் நிலை உள்ளது. எனவே இந்த தரைப்பாலத்தில் தடுப்புகள் அமைக்க வேண்டும் .

-மனோகர், தென்னம்பாளையம்.

9876590881

மேலும் செய்திகள்