குப்பைகளால் சுகாதார சீர்ேகடு

Update: 2022-11-20 13:00 GMT

ஆனைமலையை அடுத்த வேட்டைகாரன்புதூர் செல்லும் சாலையோரத்தில் குப்பைகள் அதிகளவில் கொட்டப்பட்டு உள்ளன. இவை பல நாட்களாக அகற்றப்படாமல் உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதோடு மழை பெய்யும்போது கடும் துர்நாற்றம் வீசுகிறது. இது தவிர குப்பையில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை கால்நடைகள் தின்னும் நிலை உள்ளது. மேலும் குப்பைகள் காற்றில் பறப்பதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். எனவே குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்