செடி, கொடிகள் அகற்றப்படுமா?

Update: 2022-11-16 17:42 GMT

சேலத்தை அடுத்த ஆண்டிப்பட்டிக்கும், போடிநாயக்கன்பட்டிக்கும் இடையே ரேஷன் கடை உள்ளது. அந்த கடைக்கு செல்லும் வழியிலும், அதனை சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்துவிட்டது. ரேஷன் கடைக்கு வருபவர்கள் அச்சத்துடன் வந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து செடி, கொடிகளை அகற்றி தூய்மையாக வைக்க வேண்டும்.

-தனசேகர், ஆண்டிப்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்