தீயிட்டு எரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்

Update: 2022-07-17 11:35 GMT
சேரன்மாதேவி ஒன்றியம் தெற்கு வீரவநல்லூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அழகப்பபுரம் கிராமத்தில் துணை சுகாதார நிலையம் அமைந்துள்ளது. வீடு மற்றும் தெருக்களில் தூய்மை பணியாளர்களால் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் அனைத்தும் அங்கு கொட்டப்படுகின்றன. பின்னர் அந்த பிளாஸ்டிக் கழிவுகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுவாச கோளாறுகள் ஏற்படுகின்றன. எனவே இதனை தடுத்து நிறுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்