தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2022-11-16 12:37 GMT

ஆனைமலை அருகே உள்ள தென்சங்கம்பாளையத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. மேலும் குப்பைகளை சரிவர அகற்றாததால் துர்நாற்றம் வீசுகிறது. இதற்கிடையில் தற்போது மழை பெய்து வருவதால் தேங்கி கிடக்கும் குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்