கூடுதல் தூய்மை பணியாளர்கள் வேண்டும்

Update: 2022-11-16 10:43 GMT

பொள்ளாச்சி அருகே ஆழியாறில் அணை, வண்ண மீன் காட்சியகம், குரங்கு நீர்வீழ்ச்சி, பூங்கா ஆகியவை உள்ளது. இதை கண்டு ரசிக்க தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் சாப்பிட்டுவிட்டு தூக்கி எறியும் எச்சில் இலைகள் மற்றும் தின்பண்ட பாக்கெட்டுகள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. இதை அகற்ற குறைவான தூய்மை பணியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால் குப்பைகளை முழுமையாக அகற்ற முடிவதில்லை. எனவே கூடுதலாக பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்