நோய் பரவும் அபாயம்

Update: 2022-11-09 15:47 GMT

சேலம் தளவாய்ப்பட்டி அவுசிங் போர்டு பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு செல்லும் பாதையில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. அந்த பகுதியில் பன்றிகள் மற்றும் தெருநாய்கள் தொல்லைகள் அதிகமாக உள்ளது. அந்த வழியாக செல்லும் மாணவர்கள் அச்சத்துடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர். மேலும் துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகள் தேங்காதவாறும் பன்றிகள், தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பெருமாள், முத்தாம்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்