சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2022-11-06 13:28 GMT
கரூர் மாவட்டம், புன்னம் ஊராட்சி புன்னம் சத்திரம் பகுதிகளில் ஓட்டல்கள், டீக்கடைகள், மளிகை கடைகள், பலகாரக் கடைகள், பழக்கடைகள், பேக்கரிகள், துணிக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் அதிகளவு பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் கப்புகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் இந்த கடைகளில் இருந்து சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் தார் சாலையின் ஓரத்தில் கொட்டி வருகின்றனர். அதேபோல் மருத்துவமனைகளில் சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகளையும் தார் சாலை ஓரத்தில் கொட்டி வருகின்றனர். தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக இப்பகுதியில் துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது. மேலும் மழைநீர் கொட்டி கிடைக்கும் கழிவுகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் அவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்