குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-11-02 20:01 GMT
சிதம்பரம் 1-வது வார்டு பாரதி தெருவில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. குப்பைகளை பன்றிகள் கிலறி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்களுக்கு பலவித நோய் பரவும் அபாய நிலையும் உள்ளது. எனவே சிதம்பரம் 1-வது வார்டு பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றி, சுகாதார பணிகள் மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்