சுகாதார கேடு

Update: 2022-10-16 17:14 GMT

சேலம் ஜாகீர் அம்மாபாளையம், சின்ன அம்மாபாளையம், ஜாகீர் ரெட்டிபட்டி ஆகிய 3 ஊர்களை இணைக்கும் இடத்தில் இறைச்சி கழிவுகளை கொட்டி செல்கின்றனர். இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியே செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். அந்த பகுதியில் சுகாதார ்கேடும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இங்கு இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, ஜாகீர்அம்மாபாளையம், சேலம்.

மேலும் செய்திகள்